பண்ணை மகளிர் குழுவுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி 

ராஜபாளையத்தில் பண்ணை மகளிர் குழுவுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையத்தில் பண்ணை மகளிர் குழுவுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
 வீரபாண்டி வட்டாரம், ராஜபாளையத்தில் 20 பெண் விவசாயிகளைக் கொண்டு அம்மா பண்ணை மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவை மேம்படுத்தும் நோக்கில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
 பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குநர் என். நாகா பசுபதி தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.
 இதில், நுண்ணீர் பாசனம் மற்றும் ஜல் சக்தி அபியான் திட்டங்களைப் பற்றியும், பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். பயிற்சியில் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் கே.ராஜேந்திரன், களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலர் எஸ். வெங்கடேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் சி. சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கு பெற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com