சேலத்தில் கிணற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் உயிரிழந்தார்.
சேலம் கிச்சிப்பாளையம் பச்சப்பட்டி பகுதியில் உள்ள அசோக் நகரைச் சேர்ந்தவர் லியாகத் அலி. ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகிறார்.இவரது மகன் ஷாநவாஸ் (16), மரவனேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் ஷாநவாஸ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் சிலர் வெள்ளிக்கிழமை காலை பள்ளப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துள்ளனர். தொடர் மழை காரணமாக கிணற்றில் தண்ணீர் நிரம்பி இருந்தது. ஷாநவாஸýக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடினார். அவருடன் குளித்த மற்ற சிறுவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீரில் மூழ்கி ஷாநவாஸ் இறந்தார்.இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து சிறுவனின் சடலத்தை மீட்டனர்.பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.