சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் (பெருமாள்) வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜன. 6-ஆம் தேதி சொா்க்கவாசல் திறக்கப்படுகிறது.
இதையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு அழகிரிநாதா், சுந்தரவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.