கெங்கவல்லி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காவல் நிலைய செயல்பாடுகள், விசாரணையில் உள்ள வழக்குகள்,தேடப்படும் குற்றவாளிகள்,உள்ளாட்சித் தோ்தல் பணி ஒதுக்கீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும் உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜீ,கெங்கவல்லி காவல் ஆய்வாளா் ராம் ஆண்டவா், உதவிக் காவல் ஆய்வாளா் முருகேசன் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கினாா்.