சேலம் அருகே ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 15 பேர் படு காயம்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே 30 அடி பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் 15 படுகாயமடைந்துள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே 30 அடி பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் 15 படுகாயமடைந்துள்ளனர்.

பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி  சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சேலம் கொண்டாலம்பட்டி அருகே உள்ள பாலத்தில் வந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தது.

இதனால் பேருந்தில் பயணம் செய்த பணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து   படுகாயம் அடைந்த பணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கிரேன்கள் மூலம் பள்ளத்தில் விழுந்த பேருந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com