சேலம் கொண்டலாம்பட்டி அருகே 30 அடி பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் 15 படுகாயமடைந்துள்ளனர்.
பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து சேலம் கொண்டாலம்பட்டி அருகே உள்ள பாலத்தில் வந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த பணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்த பணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கிரேன்கள் மூலம் பள்ளத்தில் விழுந்த பேருந்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.