நரசுஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆர்.பி.சாரதி காலமானார்

சேலம் நரசுஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆர்.பி.சாரதி செட்டியார் (88) வெள்ளிக்கிழமை காலமானார்.

சேலம் நரசுஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆர்.பி.சாரதி செட்டியார் (88) வெள்ளிக்கிழமை காலமானார்.
நரசுஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆர்.பி.சாரதி செட்டியார். இவர் நரசுஸ் சாரதி என்டர்பிரைசஸ், நரசுஸ் இண்டஸ்ட்ரீஸ், நரசுஸ் சாரதி ஜூவல்லரி, நரசுஸ் ஸ்பின்னிங் மில் நிறுவனங்கள், நரசுஸ் சாரதி பொறியியல் கல்லூரிகளை உள்ளிட்டவைகளை நிறுவி நடத்தி வந்தார்.
இவர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். அவரது உடலுக்கு தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.இவருக்கு சிவா என்ற மகனும், ஜெயஸ்ரீ, லதா என்ற இரு மகள்களும் உள்ளனர். இதில் ஆர்.பி.சாரதி செட்டியாரின் மனைவி வசந்தா மற்றும் இரண்டாவது மகன் முரளி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விபத்து ஒன்றில் இறந்தனர்.
காலமான ஆர்.பி.சாரதி செட்டியாரின் உடலை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக அவரது உறவினர்கள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com