இரு சக்கர வாகனத் திருட்டு அதிகரிப்பு

 ஆட்டையாம்பட்டி, மல்லூர்,   மகுடஞ்சாவடி,  இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் திருட்டு போகின்றன. 


 ஆட்டையாம்பட்டி, மல்லூர்,   மகுடஞ்சாவடி,  இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் திருட்டு போகின்றன. 
குறிப்பாக வீடுகளின் வெளியே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வாரச் சந்தைகளில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் குறிவைத்து திருடிச் செல்கின்றனர். 
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யாமல்,  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் மர்ம நபர்கள் துணிந்து இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.  இதனால்  இரு சக்கர வாகனங்களை வைத்திருப்போர் மத்தியில் அச்சம் நிலவுகிறது.  மேலும், இருசக்கர வாகனத் திருடர்களை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com