மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையைத் திரும்ப பெற வலியுறுத்தி, ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் நேரு தலைமை வகித்தார். கட்சியின் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஏற்காடு லாங்கில் பேட்டை ,நகர் பகுதிகள், பேருந்து நிலையம் ஜெரினாகாடு, முருகன் நகர், கோவில்மேடு,லூத்தர் பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், ஒண்டிக்கடை, ஐந்து சாலை பகுதியில் பொது மக்களுக்கு புதிய கல்வி கொள்கையின் பாதிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு கையெழுத்துகள் பெறப்பட்டன.