சங்ககிரியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததில் 38.2 மி.மீட்டர் மழைப் பதிவானது.
சங்ககிரியில் மழை பெய்த நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டது. தாழ்வான பகுதியில் மழை நீர்த்தேங்கி நின்றது.
பேருந்து நிலையத்தில் பயணிகள் ஒதுங்க நிழற்குடை இல்லாமல் சிரமத்துக்குள்ளாகினர். மழைநீருடன் சாக்கடை நீர் தேங்கி நின்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அப் பகுதியைக் கடந்து செல்ல சிரமப்பட்டனர்.