கெங்கவல்லியில் மக்களவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல், அதிகாரிகளுடன் ஆலோசனைக் நடத்தினார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அனுஷ்யாதேவி வெள்ளிக்கிழமை மாலை கெங்கவல்லி வந்தார். இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் இடத்தை பார்வையிட்டார்.மேலும் கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் கெங்கவல்லி வட்டாட்சியர் சுந்தரராஜன், தேர்தல் துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.