மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்: எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரன்

 மக்களவைத் தேர்தலில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் பேசினார்.


 மக்களவைத் தேர்தலில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் பேசினார்.
சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். கூட்டத்தில் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் பேசியது: மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் வெற்றி பெற்றிட திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு இப்போதே தேர்தல் பணியை தொடங்கிட வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதத் திட்டங்களும் செயல்படுத்தவில்லை. எனவே ஆட்சியை அகற்ற தீவிரமாகப் பாடுபட வேண்டும்.மக்களவைத் தேர்தலில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com