சாலை விபத்து: ஒருவர் பலி

எடப்பாடி அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உடன் சென்றவர் படுகாயமடைந்தார்.

எடப்பாடி அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உடன் சென்றவர் படுகாயமடைந்தார்.
கொங்கணாபுரம் அருகில் ஒலக்கசின்னானூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (43), இவரது சகோதரர் ராஜா (38) கட்டடத் தொழிலாளர்களான இருவரும், திங்கள்கிழமை மாலை கொங்கணாபுரத்திலிருந்து சங்ககிரி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த  ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொங்கணாபுரம் போலீஸார் வழக்குப்
பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com