மே 18-இல் ஸ்ரீ நரசிம்மரின் அவதார தின கொண்டாட்டம்

சேலத்தில் மே 18-ஆம் தேதி ஸ்ரீ நரசிம்மரின் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

சேலத்தில் மே 18-ஆம் தேதி ஸ்ரீ நரசிம்மரின் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ நரசிம்மரின் அவதார தினம் உலகம் முழுவதும் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்) சார்புடைய கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
சேலம் கருப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் வரும் 18-ஆம் தேதி ஸ்ரீ நரசிம்மரின் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
விழாவில் மாலை 6.30 மணிக்கு பஜனையும், 7 மணிக்கு அபிஷேகமும், 7.15 மணிக்கு ஸ்ரீ நரசிம்மர் உபன்யாசமும், 8.15 மணியளவில் நாடகமும் நடைபெறவுள்ளது.
விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரசாத விருந்து வழங்கப்படும் என அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com