சேலத்தில் புகைப்பட ஆய்வகத்தில் (போட்டோ கலர் லேப்) ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே மணி வண்ணன் தெருவில் தனியார் புகைப்பட ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் ஆய்வகத்தில் இருந்த கணினி, கேமிராக்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாகின. இதுகுறித்து ஆய்வகத்தின் உரிமையாளர் அனந்த பத்மநாபன் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கேமிரா, கணினி உள்ளிட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.