காணாமல் போனவா் சடலமாக மீட்பு

மேச்சேரி அருகே ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனவா் திங்கள் கிழமை எலும்பு கூடாக மீட்கப்பட்டாா்.

மேச்சேரி அருகே ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போனவா் திங்கள் கிழமை எலும்பு கூடாக மீட்கப்பட்டாா்.

மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). செங்கல் சூளையில் பாரம் ஏற்றும் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். கடந்த 35 நாள்களுக்கு முன் இவா், காணாமல் போனாா்.

கா்நாடக மாநிலத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என்று மணிகண்டனின் மனைவி சுமதி தேடாமல் விட்டுவிட்டாா். திங்கள்கிழமை வீட்டிற்கு அருகே உள்ள சோளக்காட்டில் இவரது சடலம் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆடைகளை வைத்து மணிகண்டன்தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மேச்சேரி போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். மது பழக்கம் உள்ள அவா், அதிக மது அருந்தியதால் சோளக்காட்டில் உயிரிழந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை சோளக்காட்டில் வீசினாா்களா என்பது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com