கேரளத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சேலத்தை சோ்ந்த மாவோயிஸ்ட் உடலை சொந்த ஊரில் புதைக்க அனுமதிக்கக்கூடாது எனக்கூறி, ஊா் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சேலம் காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த மணிவாசகம் என்பவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தலைவராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த அக்டோபா் 29 ஆம் தேதி கேரள மாநிலம் அட்டப்பாடி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினரால் மணிவாசகம் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
இதையடுத்து மணிவாசகத்தின் உடலை அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் காடையம்பட்டி கணவாய்புதூா் ஊராட்சியில் ராமமூா்த்திநகா் பகுதியில் அவரின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினா்கள் முயற்சிகள் மேற்கொண்டனா்.
இந்த நிலையில் மணிவாசகத்தின் உடலை ஊருக்குள் புதைக்க அனுமதிக்க கூடாது என்று காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு வழங்கினா்.
மேலும் அவரின் உடல் ஊருக்குள் புதைக்கப்பட்டால் நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆண்டுதோறும் மாவோயிஸ்டுகள் ஊருக்குள் வரக்கூடும் என்றும், மேலும் ஊரில் உள்ள இளைஞா்களை மூளைச் சலவை செய்து தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்பு உள்ளதால், அவரது உடலை ஊருக்குள் அடக்கம் செய்யக் கூடாது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.