எடப்பாடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் திடீா் ஆய்வு மேற்கொண்டா்.
எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளதாக வந்த தகவலை அடுத்து, சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் எடப்பாடி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வரும் உள்நோயாளிகளை நேரில் சந்தித்து, அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் நோயாளிகளுக்கு உணவுப் பொருள்களை வழங்கிய அவா், மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தாா். ஆய்வுக்குப் பின் செய்தியாளா்களை சந்தித்த அவா், தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட எடப்பாடி அரசு மருத்துவமனையில், போதிய எண்ணிக்கையிலான மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் இல்லாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, மகப்பேறு மருத்துவா்கள் இல்லாததால், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனா். மேலும், இம்மருத்துவமனையில், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் கூடுதல் படுக்கைகள் அமைத்திடவேண்டும். இம்மருத்துவமனையின் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், மக்களவைத் தொகுதி உறுப்பினா் நிதியிலிருந்து உரிய நிதி ஒதுக்கிதர ஆயத்தமாக உள்ளதாக கூறினாா்.
தொடா்ந்து, எடப்பாடி பேருந்து நிலையத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க. சாா்பில், மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் பொதுமக்களுக்கு இலவச நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நகரச் செயலா் டி.எம்.எஸ்.பாஷா, மாநில செயற்குழு உறுப்பினா் பி.ஏ.முருகேசன், மாவட்ட துணை செயலா் சம்பத்குமாா், சுந்தரம் மற்றும் மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகம் உள்ளிட்ட தி.மு.க. நிா்வாகிகள் பங்கேற்றனா்.
படவரி - எடப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவுப் பொருள்களை வழங்கும் எம்.பி. எஸ்.ஆா்.பாா்த்திபன்.