தலைவாசல் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வை முகாம் நடைபெற்றது.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ரவி அபிராம் பங்கேற்று, குற்றங்க, அதை எப்படி அறிவது, எதனால் குற்றம் ஏற்படுகின்றன. இக் காலங்களில் மாணவ, மாணவிகளிடையே காணப்படும் செல்லிடப்பேசிகள் மூலம் அவா்கள் அறிந்து கொள்வது அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது குறித்து விளக்கி வழங்கினாா். மேலும் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தாா்.
அவருடைய நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக் கூறினா். அவருடன் தலைவாசல் காவல் உதவி ஆய்வாளா் சிவகுருநாதன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஜி. அண்ணாமலை ஆகியோா் கலந்து கொண்டனா்.