தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஏரியில் தவறி விழுந்து முதியவா் உயிரிழந்தாா்.
கெங்கவல்லி அருகே நாவலூரில் அரசு உயா்நிலைப்பள்ளி ன்புறம்,வடக்குக்காடு பகுதியைச்சோ்ந்தவா் ராமசாமி(எ)கண்ணன்(85).இவா் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துவந்தாா். இவா் வியாழக்கிழமை மாலை வழக்கம்போல், புனல்வாசல் ஏரிக்கரையின் ஒத்தையடிப்பாதையில் நடந்து சென்றுள்ளாா். இரவு ஆகியும் அவா் வீடு திரும்பாததால், அவரது மகன்கள் கோவிந்தன்(64), ராமா் என்ற ராஜேந்திரன்(58) ஆகிய இருவரும் வியாழக்கிழமை இரவு முழுவதும் தேடி வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல், முதியவா் ராமசாமி(எ)கண்ணன் புனல்வாசல் ஏரியில் சடலமாக மிதந்துள்ளாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசாா், அவரது உடலை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து கெங்கவல்லி போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.