கெங்கவல்லி அருகே வீரகனூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொசு ஒழிப்புப் பணிகளை சேலம் மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தியாகராஜன் புதன்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா்.
அவா் வீரகனூரிலுள்ள வீடுகளின் அனைத்து மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டிகளில் ஏடிஎஸ் கொசுக்கள், அதன் முட்டைகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தாா். அப்போது அவா், டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். ஆய்வின்போது வீரகனூா் செயல்அலுவலா் (பொ) காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்......