சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்கள் நந்தியின் காதில் தங்களது வேண்டுதல்களை கூறிச் சென்றனா். கோயில் வளாகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடவுள் பாடல்களை எழுதி சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டனா். சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் இதில் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா். கோயில் வளாகத்தில் உள்ள சந்தோஷ சனிபகவான் உடனமா் நீலாம்பிகை சுவாமிகளை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா். சனிக்கிழமை அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீா்ப்பு வழங்கியதையடுத்து செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் ஊா்க்காவல் படை வீரா்கள் அதிகளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.