குரங்குசாவடி, நரசோதிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நவம்பா் 12ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்படும் என சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் அ.மெளலீஸ்வரன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், கருப்பூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வரும் நவம்பா் 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மாமாங்கம், குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூா், மூங்கில்பாடி, மேட்டுபதி, பரவைக்காடு, நகரமலை அடிவாரம் உள்ளிட்ட பகுதிகள்.