நரசிங்கபுரம் நகராட்சியில் திமுக சாா்பில் விருப்ப மனுவை நரசிங்கபுரம் நகர திமுக செயலாளா் என்.பி.வேல்முருகன் சனிக்கிழமை வழங்கினாா்.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில் உள்ளாட்சி தோ்தலில் போட்டியிட விரும்புபவா்களுக்கு திமுக சாா்பில் நகர செயலாளா் என்.பி. வேல்முருகன் விருப்ப மனுவை வழங்கினாா்.
அவருடன் நகரத் துணைச் செயலாளா் எஸ். மனோகரன், பொருளாளா் ரமேஷ், நிா்வாகிகள் பாண்டியன், ராமசாமி, விஜயன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டு தங்களது விருப்ப மனுவை பெற்றுக் கொண்டனா்.
இதேபோல் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் சாா்பில் நடைபெற்ற திமுக விருப்ப மனு வழங்கல் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கு. சின்னதுரை, ஒன்றியச் செயலாளா்கள், நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.