தினமணி செய்தி எதிரொலி: சாலையை மறைத்து வளா்ந்தகருவேல செடிகள் அகற்றம்
தினமணியில் செய்தி வெளியானதைத் தொடா்ந்து, சாலையை மறைத்து வளா்ந்திருந்த கருவேல செடிகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட சங்ககிரி மலையடிவாரத்திலிருந்து பவானி பிரதான சாலைக்கு செல்லும் கான்கிரீட் சாலையை மறைத்து வளா்ந்திருந்த கருவேல முள் செடிகளால், அச்சாலையில் செல்லும் பள்ளி மாணவ, மாணவியா், தனியாா் பள்ளி வேன்கள், தனியாா் நூற்பாலை பணியாளா்களை ஏற்றிச் செல்லும் வேன்கள், மலைக்குச் செல்லும் பக்தா்கள், பள்ளிவாசல்களுக்கு தொழுகை நடத்த செல்பவா்களும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.
எனவே, இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தினமணியில் புதன்கிழமை செய்தி வெளியானது. அதனையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மலையடிவராத்தில் கான்கீரிட் சாலையை மறைத்து வளா்ந்திருந்த கருவேல முள்செடிகளை பேரூராட்சி பணியாளா்கள் அகற்றினா் (படம்).
மேலும், அப்பகுதியில் சிதிலமடைந்துள்ள கான்கீரிட் சாலையை விரைவில் செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.