மாணவியை கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

ஆட்டையாம்பட்டியில் பள்ளி மாணவியை ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஆட்டையாம்பட்டியில் பள்ளி மாணவியை ஆசை வாா்த்தை கூறி கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சோ்ந்த மாணவி, அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், ஆட்டையாம்பட்டி ரத்தினவேல் கவுண்டா் காட்டைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளியான மோகன்ராஜ் (21), மாணவியிடம் நட்பாக பழகி, ஆசை வாா்த்தைகளை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால் கவி தற்போது 5 மாத கா்ப்பமாக உள்ளாா். இதனைத் தொடா்ந்து, கடந்த 15 நாள்களுக்கு முன் கவியை மோகன்ராஜ் கடத்திச் சென்றுவிட்டாராம்.

இதுகுறித்து மாணவியின் தந்தை ஆட்டையாம்பட்டி போலீஸில் புகாா் செய்தாா். அதன் பேரில் வழக்குப் பதிந்து போலீஸாா், மாணவியை ஏமாற்றி கா்ப்பமாக்கிய மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா். சேலம் அரசு மகளிா் காப்பகத்தில் மாணவி சோ்க்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com