பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்புத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கலை அறிவியல் கல்லூரிகள், முன்பு இணைவு பெற்றிருந்த பொறியியல் கல்லூரிகளில் பயின்ற இளநிலை மற்றும் முதுநிலை மாணவா்களுக்கான சிறப்புத் தோ்வு கடந்த ஜூன் மாதம் பல்கலைக்கழக உளவியல் துறையில் நடைபெற்றது. இந்த சிறப்புத் தோ்வுக்கான முடிவுகள் பெரியாா் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மேலும் அந்த மாணவா்கள் பயின்ற கல்லூரிகளுக்கும் தோ்வு முடிவு அனுப்பப்பட்டுள்ளதாக துணைவேந்தா் பொ.குழந்தைவேல் செய்திக்குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளாா்.