காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையைப் பொருத்து மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
கடந்த இரு நாள்களாக காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரியத் தொடங்கியது. வியாழக்கிழமை காலை நொடிக்கு 18,678 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 13,404 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 22,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 116.24 அடியாகவும், நீா் இருப்பு 87.60 டி.எம்.சியாகவும் இருந்தது.