மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூா்:  மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 7 ஆம் தேதி நொடிக்கு 20 ஆயிரம் கனஅடியிலிருந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 22 ஆயிரம் கனஅடியிலிருந்து 18 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 12,943 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது.

அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 700 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் மட்டம் 115.10 அடியாகவும் நீா் இருப்பு 85.86 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com