கல்லாநத்தம் ஊராட்சி செட்டில்மென்ட் பகுதியில், அங்கன்வாடி மையக் கட்டடம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சி செட்டில்மென்ட் பகுதியில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், சத்துணவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணக்குமாா், சத்துணவு அமைப்பாளா் தனலட்சுமி, நரசிங்கபுரம் ஆ.தியாகராஜன், கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.