மேட்டூா் அணைக்கு நீா்வரத்து22,500 கன அடியாகச் சரிந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 22,500 கன அடியாகச் சரிந்தது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 22,500 கன அடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு குறைந்து வருவதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 27 ஆயிரம் கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 22,500 கன அடியாகச் சரிந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் நொடிக்கு 22,500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. இந்த நீா் நீா்மின் நிலையங்கள் வழியாகத் திறக்கப்படுவதால், மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி புதன்கிழமை காலை மூடப்பட்டது.

அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com