கெங்கவல்லியில் சிவன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
கெங்கவல்லியில் ஸ்ரீகைலாசநாதர் உடனுறை காமாட்சி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதன்கிழமை காலை சிவன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகன், துர்க்கை ஆகிய சந்நிதிகளுக்கு மந்திரங்கள் ஓத கும்பாபிஷேக நீர் ஊற்றப்பட்டது. முன்னதாக கோயிலில் கும்பாபிஷேக யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவைக் காண தம்மம்பட்டி, கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர், கொண்டயம்பள்ளி, நடுவலூர், ஒதியத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 3 ஆயிரம் பேர் வந்திருந்தனர். விழாவுக்கு கெங்கவல்லி போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.