தருமபுரி எம்.பி. நன்றி தெரிவிப்பு

தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் மேச்சேரி ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் மேச்சேரி ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
 உப்பாரப்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய நன்றி அறிவிப்புக் கூட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் பா.கோபால் தலைமை வகித்தார். மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளர் எஸ்.சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். எருமப்பட்டி, வெள்ளார், தெத்திகிரிப்பட்டி, புக்கம்பட்டி, பொதியம்பட்டி, சாத்தப்படி விருதாசம்பட்டி, சாவடியூர் என 51 கிராமங்களில் வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
 இக்கூட்டங்களில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் பேசும் போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே நகைக் கடன், கல்விக் கடன் உள்ளிட்டவை தள்ளுபடி செய்ய முடியும். தகுதி உள்ள அனைவருக்கும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 இதில், வெள்ளார் கிளை செயலர் கதிர்வேல், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கோவிந்தராஜ், போக்குவரத்துக் கழக தொமுச நிர்வாகிகள் செங்கோட்டையன், ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com