மல்லியகரை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்துள்ள மல்லியகரையில் மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியோடு கடந்த வாரம் தொடங்கியது. இதனையடுத்து பொங்கல் வைத்தல், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து புதன்கிழமை திருத்தேர் வடம் பிடித்தல் இழுத்தல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.