மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 13,000 கன அடியாகச் சரிந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் பெய்து வந்த மழை தணிந்தது. மழை தணிந்த காரணத்தால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து திறக்கப்பட்டு வந்த உபரி நீர் குறைக்கப்பட்டது. உபரி நீர் குறைப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாகச் சரிந்து வருகிறது.
வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,000 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.