மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 9,097 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக திங்கள்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 7,812 கனஅடியிலிருந்து நொடிக்கு 9,097 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 8,000 கனஅடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119. 95 அடியாகவும், நீர் இருப்பு 93.39 டி.எம்.சி. யாகவும் இருந்தது.