புனித வேளாங்கண்ணிஆலய தேர்பவனி

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள வேளாங்கண்ணி மாத ஆலய தேர்பவனி நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடை


சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள வேளாங்கண்ணி மாத ஆலய தேர்பவனி நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கொங்கணாபுரத்தை அடுத்த வெட்டுக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற  வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வெள்ளி விழா மற்றும் தேர்த்திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளி விழா திருப்பலி நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.  தொடர்ந்து, சனிக்கிழமை இரவு நடைபெற்ற அன்னை திருத்தேர்பவனி நிகழ்ச்சியை ஒட்டி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மலர் தேரில் அன்னையின் திருபவனி நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற நற்கருணை ஆசீர் நிகழ்வில், சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவ பெருமக்கள் பங்குகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எடப்பாடி பங்குத் தந்தை தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com