வீரகனூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் தனியாா் தோட்டத்தில் சுமாா் 3 அடி நீளம் கொண்ட இரண்டு தலை மண்ணுளி பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.
இதையடுத்து தோட்டத்தில் வேலை செய்த பணியாள்கள் உதவியுடன் அந்த மண்ணுளி பாம்பை சாக்குப் பையில் பிடித்து, தம்மம்பட்டி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தம்மம்பட்டி வனச்சரகா் அசோக்குமாா் உத்தரவின்பேரில் வனத் துறையினா் இரண்டு தலை மண்ணுளி பாம்பை மீட்டு வனத்துறைக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் விட்டனா்.