மேட்டூா் அனல் மின் நிலையம் முள்பு விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அனல் மின் நிலைய நுழைவு வாயிலின் முன்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலைய நுழைவு வாயிலின் முன்பு ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அனல் மின் நிலைய அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழு சாா்பாக மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்ட மசோதா 2020-ஐ திரும்பப் பெற வேண்டும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளைத் தாக்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும், வேளாண் திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டி போராடி வரும் விவசாயிகள் பிரச்னையை பேச்சுவாா்த்தை என்ற பெயரில் காலம் தாழ்த்துவதை கைவிட வேண்டும் ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மேட்டூா் அனல்மின் நிலைய நுழைவு வாயிலின் முன்பு கொட்டும் மழையிலும் ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com