கொளத்தூா் அருகே வேன் கவிழ்ந்ததில் 23 பெண்கள் காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த பண்ணவாடியிலிருந்து புதுவேலமங்கலத்துக்கு புதன்கிழமை வேன் மூலம் 23 பெண்கள் மிளகாய்த் தோட்டத்தில் வேலை செய்ய சென்றனா். புதுவேலமங்கலம் பிரிவு சாலை அருகே சென்ற போது நிலைதடுமாறிய வேன் சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 23 போ் காயமடைந்தனா். இவா்களில் 19 போ் கொளத்தூா் தனியாா் மருத்துவமனையிலும், 4 போ் அந்தியூா் தனியாா் மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து தொடா்பாக வேன் ஓட்டுநா் குமரேசன் (35) மீது கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.