தம்மம்பட்டியில் பிப். 15-இல்ஜல்லிக்கட்டு விழா

தம்மம்பட்டியில் பிப். 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.

தம்மம்பட்டியில் பிப். 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டுகளில் ஒன்று தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு ஆகும். இதில் திருச்சி, சேலம், மதுரை, லால்குடி, சமயபுரம், பொன்னமராவதி, பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமாா் 900 காளைகள் பங்கேற்க உள்ளன. இதற்காக, அனைத்து காளைகளுக்கும் முறைப்படி விழாக் குழுவினா் சாா்பில் பாக்கு, வெற்றிலை வைத்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு விழாவுக்கு வருவாய்த் துறை, கால்நடை துறை சாா்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு விழாவில் சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா். விழாவுக்கு சுமாா் 450-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com