மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 90 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெகுவாகச் சரிந்தது. சனிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 49 கன அடியாகச் சரிந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 90 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக நொடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீா்இருப்பு 72.82 டி.எம்.சி.யாக இருந்தது.