சங்ககிரி, வி.என். பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமா் ஸ்ரீ வஸந்த வல்லப ராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டாள் திருக் கல்யாணம் நிகழ்ச்சியில் அருள்மிகு வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்த வல்லபராஜ பெருமாள் சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டன. பின்னா் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும் அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களை பக்தா்கள் பாடினா்.
அதையடுத்து சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளைத் தரிசித்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. சங்ககிரி மலையில் உள்ளஅருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.