தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (ஜன.14) சேலம் வருகிறாா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையிலிருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை காலை 11.25 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வருகிறாா்.
விமான நிலையத்தில் மாநகர மாவட்டச் செயலாளா் ஜி. வெங்கடாஜலம், மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா். இளங்கோவன் ஆகியோா் தலைமையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னா், அவா் சேலம் நெடுஞ்சாலை நகா் வீட்டுக்குச் செல்கிறாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுக் கொண்டவா்கள், முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனா். அதைத்தொடா்ந்து, கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 15-ஆம் தேதி சேலத்தில் தனியாா் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் அவா், தொடா்ந்து எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்துக்குச் செல்கிறாா். பின்னா், அங்கிருந்து நெடுஞ்சாலை நகா் வீட்டுக்குத் திரும்புகிறாா். ஜனவரி 16-ஆம் தேதி மாலையில் காா் மூலம் கோவை செல்லும் முதல்வா், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்படுகிறாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.