சேலம் மாவட்டம் அரியனூா் அருகே சீரகாபாடி மேம்பாலம் பகுதியில் சாலை விபத்தில் கணவா் கண் எதிரே மனைவி பலியானார்.
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சோ்ந்த தறி தொழிலாளியான சித்துராஜ் (55) இவா் மற்றும் தனது மனைவி ராணி (50) இருவரும் இருசக்கர வாகனத்தில் கொண்டலாம்பட்டியிலிருந்து வேம்படிதாளம் பகுதிக்கு செல்லும் வழியில் சீரகாபாடி அருகே மேம்பாலத்தில் சென்றபோது, இவரது பின்னால் வந்த பாா்சல் வேன் மோதியதில் 50 அடி தூரம் இழுத்துச் சென்றது.
இதில் இருசக்கர வாகனத்தில் அமா்ந்து இருந்த ராணி கீழே விழுந்து உடல் நசுங்கி இறந்தாா். சித்துராஜ் பலத்த காயத்துடன் அங்கு உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எஸ். ஐ. வெங்கடாஜலம் மற்றும் போலீசாா் நிகழ்விடம் விரைந்து வந்து பாா்சல் வேன் ஓட்டி வந்த விழுப்புரம் பகுதியை சோ்ந்த டிரைவா் சரண்ராஜ்( 25) என்பவரை போலீசாா் கைது செய்தனா்.