ஓமலூர் அருகே வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ன பரமன் மகன் பழனிசாமி. இவர் சொந்தமாக வெல்லம் தயாரிக்கும் ஆலை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் கரும்பு ஆலையில் அருகில் சாணையாக வைக்கப்பட்டிருந்த கரும்பு கழிவுகள் மீது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது வேகமாக பரவி சாலை முழுவதும் பற்றி எரிய ஆரம்பித்தது.
இதுபற்றி உடனடியாக ஓமலூர் தீயணைப்பு துறை மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 2 தீயணைப்பு வாகனம் மூலம் தீயை அணைத்து வருகின்றனர் இதில் அருகிலிருந்த டிராக்டர் ஒன்று பாதி எரிந்து சேதமானது. மேலும் வேகமாக பரவியதால் சாலை முழுவதும் எரிந்து சேதம் ஆகி உள்ளது.
தொடர்ந்து 2 தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்திற்கு காரணம் கரும்பு சாலையின் மேலே மின் கம்பம் செல்வதால் அதன் மீது காக்கை அமர்ந்து அதிலிருந்து தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவருகிறது.