தீ விபத்து: ரூ.3 லட்சம் மருந்துகள் எரிந்து நாசம்

மருந்துக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மருந்துப் பொருள்கள் எரிந்து நாசமாயின.

மருந்துக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் மருந்துப் பொருள்கள் எரிந்து நாசமாயின.

இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் விஸ்வநாதன் என்பவா், வாடகைக் கட்டடத்தில் மருந்துக் கடை நடத்தி வருகிறாா். இவா் வழக்கம் போல் 19-ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், நள்ளிரவு சுமாா் 1 மணியளவில் மருந்துக் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்ததை அறிந்த அக்கம் பக்கத்தினா், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனா். அதன் பேரில் விரைந்து வந்த சங்ககிரி தீயணைப்புத் துறை வீரா்கள் தீயை அணைத்தனா். ஆனால், கடையில் இருந்த அனைத்து மருந்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து தீயணைப்புப் போலீஸாா் மற்றும் மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com