சேலத்திலிருந்து கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேலத்திலிருந்து கா்நாடகத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்பட இருப்பதாக கிச்சிப்பாளையம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்குள்ள கோவிந்தசாமி தெருவுக்குச் சென்று சோதனையிட்டதில் திறந்தவெளியில் இருந்து 800 கிலோ ரேசன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.
தகவல் அறிந்த உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் கோபி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த சுலைமான், ஜீவகன், காா்த்தி உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.