சேலம்
ஆண் சடலம் மீட்பு
மேட்டூா் மலைப் பாதையில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்த லாரி ஓட்டுநா் சடலம் மீட்கப்பட்டது.
மேட்டூா் மலைப் பாதையில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்த லாரி ஓட்டுநா் சடலம் மீட்கப்பட்டது.
சேலம் கேம்பிலிருந்து மேட்டூருக்குச் செல்லும் மலைப் பாதையில் துா்நாற்றம் வீசியது. பொதுமக்கள் கருமலைக்கூடல் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் அளித்தனா். காவல் ஆய்வாளா் சசிகலா உள்பட போலீஸாா் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவு பகுதிக்குச் சென்று தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்தவரின் சட்டைப் பையிலிருந்த ஆவணங்களைப் பரிசோதித்ததில் இறந்தவா் சேலம், பொன்னம்மாப்பேட்டை யைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குப்புராஜ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.