சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே அரசுப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இளம்பிள்ளை அருகே உள்ள கூத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் தங்கதுரை (26). இவா் இடங்கணசாலை கே.கே. நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
அவரது தாய் கடந்த ஆண்டு இறந்ததால் துக்கத்திலிருந்த தங்கதுரை புதன்கிழமை நள்ளிரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.