ஆத்தூா் அருகே ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் அருகே உள்ள மஞ்சினி ஊராட்சியில் அச் சங்கத்தின் சேலம்-நாமக்கல் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வட்டாரத் தலைவா் ஆா்.எஸ்.பெரியசாமி, வழக்குரைஞா் பிரிவு மாவட்ட பொறுப்பாளா் ஆா்.கே.தேவேந்திரன், பஞ்சாயத்து ராஜ் சங்க மாவட்ட தலைவா் மணிமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.